Saturday 4th of May 2024 01:59:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா: தமிழ்நாடு விவசாய அமைச்சர் துரைக்கண்ணு மரணம்!

கொரோனா: தமிழ்நாடு விவசாய அமைச்சர் துரைக்கண்ணு மரணம்!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் விவசாய அமைச்சர் ஆர். துரைக்கண்ணு 72-ஆவது வயதில் நேற்றிரவு உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்றிரவு 11.15 மணியளவில் அவர் மரணமடைந்ததாக அவா் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை - காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் திகதி இரவு சேலத்தில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக துரைக்கண்ணு சென்றார்.

இதன்போது அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது சென்னைக்கு கொண்டுவரப்பட்டு காவிரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்து நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவரது நுரையீரல் 90 வீதம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வேறு பல நோய்களும் அவருக்கு இருந்த நிலையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்த துரைக்கண்ணு, 2016ஆம் ஆண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று விவசாயத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

அ.இ.அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டது முதலே அக்கட்சியில் இணைந்து மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் துரைக்கண்ணு இருந்தவராவார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE